உயிர் பிரிந்து போகும்போது உயிராய் வந்தவளே
மனமுடைந்து போகும் போது மருந்தாய் ஆனவளே
சிறகிழந்து நிற்கையில சிறகு தந்தவளே
நிலையிழந்த போது நினைவு தந்தவளே..
தோற்கும் போதெல்லாம் தோள் தந்தவளே
எனக்காக நீ அழும்போதுஎனக்குள்ளே ஒரு கேள்வி
நீ என் தோழியா இல்லை காதலியா?
கடற்கரை நாம் சென்று
கட்டிய மணல் வீடு
ஓடை எங்கும் ஓடிவிளையாடி
உல்லாசமாய் திரைப்படம் பார்த்து
ஓரக்கண்களால் உயிர் தடவி
விடைபெறும் போது விழி கலங்குதே?
நீ என் தோழியா இல்லை காதலியா?
பசியோடு நான் இருந்தால்
பரிவோடு நீ நோக்கி
அன்போடு எனக்கு ஊட்டி
அம்மாவாய் ஆனவளே
அன்போடு அரவணைத்த நீ எந்தன்
தோழியா இல்லை காதலியா?
கோயிலுக்கு நாம் சென்றால்
என்பெயரில் நீ செய்யும் அர்ச்சனைகள்
என் நெற்றியில் நீ இட்ட விபூதி
என் கண்ணில் பட்டபோது
உன்கண்ணில் நீர் வந்ததே
இதெல்லாம் என்னை கேட்கின்றன?
நீ என் தோழியா இல்லை காதலியா?
எனக்காக பேசும் ஒரு ஜீவன்
என்னை நேசிக்கும் ஒரு ஜென்மம்
பாலைவனமான என் வாழ்வை
பூஞ்சோலை ஆக்கிய நீ
எனக்கு சிரிக்க கற்று தந்த நீ
என் தோழியா இல்லை காதலியா?
கானல் நீராய் போன என் வாழ்வில்
அடைமழையாய் ஆனவளே
கல்லில் ஈரத்தை கண்டுபிடித்தவளே
வழமை போல் இன்றும் உன்னை
கண்டு செல்ல வருகிறேன்
நீ என் தோழியா இல்லை காதலியா ?
என்ற புதிரான புதிரோடு?
No comments:
Post a Comment