உலகுக்கு நீ ஒன்றும் அழகி இல்லை
ஆனால் எனக்கு நீதான் உலக அழகி
பணத்திற்கு நான் அடிமை இல்லை
ஆனால் உன் பாசத்திற்கு நான் அடிமை
சுற்றிவந்த பல வேஷங்களை வெறுத்தேன்
உன்மேல் கொண்ட நேசத்தினால்...
சுவரில் உள்ள சித்திரங்கள் பிடிக்கவில்லை
என் மனதில் உன் விம்பம் குடியிருப்பதால்
வானவில்லின் வர்ணம் பிடிக்கவில்லை
நீ கண்ணிமைக்கும் அழகினை பார்த்தபோது
கடல் அலையும் எனக்கு பிடிக்கவில்லை
என்னுள்ளே உன் நினைவலைகள் மோதுவதால்...
எனை மறந்து தூங்கும் போதும் உன்னை மறக்க
முடியாமல் கனவிலும் வரவேற்கிறேன் உன் திருமுகத்தை
கனவு கலையும் போது கண்விழித்து தேடுகிறேன்
தலையணை கீழ் இருக்கும் உன் நிழல் படத்தை
நீ இல்லாத வேளைகளில் உன் படத்துடன்
புலம்புகிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று ...
No comments:
Post a Comment