Tuesday, November 22, 2011

கரு விழியாலே சாய்த்தவளே

உன் கூந்தல் காதலிக்கும் மலரை
என் புத்தகம் தேடிப்பார் இருக்கும்
சருகான அம்மலரை சிதறாமல் சேமித்து
நானுனக்கு வாழ்த்து மடல் நெய்வேனே...

கரு விழியாலே சாய்த்தவளே
கலகங்கள் செய்தவளே உன் விழி
சொல்லும் கதை கேட்டு என்
வாயினிலே சிரிப்(பூ)பு மலரும்....

உனைப்பார்த்து தலை ஆட்டும்
மரங்களிலே தாவிவந்து
மனிதகுரங்கெல்லாம் காத்திருக்கும்
உன் நினைவுகளை கவர்ந்து செல்ல ...


கண்ணயர்ந்தால் உன் நினைப்பு
கனவுகளில் உன் குறுஞ் சிரிப்பு
நீ இல்லாக் கனவுகளில்
தொடங்குதடி உலக யுத்தம் ....

நீ நடந்து போன பின்னே
உன் சுவடுகளில் என் காலிருக்கும்
உன் கால் பதிந்த தடங்கள் எல்லாம்
என் வாழ்கை வழிகாட்டியா...

வெறிச்சோடிய பாதைகளில்
நீ நடந்தால் சனம் அலை மோதும்
சினம் கொண்டு உனை கண்டால்
ஜில்லென்று ஆவேனே ....

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket