Sunday, November 20, 2011

காதல் என்றால்?

காதல் என்றால் கவலையா? 
கானல் நீரின் உருவமா? 
நெருஞ்சி முள்ளின் வடிவமா? 
நெஞ்சை கிழிக்கும் கருவியா? 
பாசம் கட்டும் வேஷமா ?
உயிரை எடுக்கும் யமனா? 
இல்லை ...
இரவை துரத்தும் நிலவா? 
வாசம் வீசும் மலரா? 
கலைய மறுக்கும் கனவா? 
உயிரை கொடுக்கும் உறவா? 
கண்ணிரண்டில் ஒளியா? 
என் வாழ்க்கையின் வழியா? 

இல்லை 

காயம் கொடுக்கும் வலியா?
கண்ணில் நீரின் வரவா?  
காலம் செய்யும் கோலமா? 
சாயம் போகும் புடவையா? 
பொதிகள் சுமக்கும் கழுதையா?
கலைந்து செல்லும் மேகமா?  
இல்லை 
புல்மேல் விழுந்த பனியா? 
பாலைவனத்தில்  மலரா?
நிழல் கொடுக்கும் மரமா? 
சிறகு முளைத்த பறவையா?
சுவாசம் கொடுக்கும் தென்றலா?
என்னை வாழ வைக்கும் வரமா?
காதல் என்றால் வரமா? இல்லை சாபமா

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket