பூக்களின் தேனை எல்லாம்
வார்த்தையிலே கொண்டவளே
முழுமதியின் நிலவொளியை
சிரிப்பினிலே தந்தவளே
உன் சிரிப்பலையின் ஓசைகளை
மனதுக்குள் மீட்டுகிறேன்...
உன் நிழல்படத்தின் வர்ணங்களா
வானவில் உடுத்திக்கொண்டது?
உன்னை தீண்டி விட வேண்டுமென்றா
மழைத்துளியும் இறங்கிவருகிறது ?
வான்போரவையில் விழுந்த ஓட்டை வழியே
எட்டிப்பார்ப்பது உன் மதி முகம் தானா?
பச்சை மரங்களை மட்டும் காதலித்த
என்னுள் இச்சைகளை மூட்டுபவளே
உன் கொச்சை தமிழில் சிக்கிவிட்டேன்
சிந்தனைகள் மேலோங்கி கவிதைகளும்
கண்ணிமை வீசும் காற்றில் கனவுகளும்
கலைய மறக்கும் நினைவுகளும் தந்தவளே
உன் பார்வையின் நீளம் நைல் நதியா?
உன் கூந்தலில் நானும் நீந்த வரவா?
என் கனவுகளில் உன் கலர் படமா?
மோனாலிசா தான் உன் இயற்பெயரா?
நீ குடியிருப்பதெந்தன் மனச் சிறையா?
உன்னை விட்டு பிரியேன் உயிர் நிழலாய்...
என் மனக்கண்ணாடியின் மாறாத விம்பமே..
நீ இன்றேல் எனக்கில்லை இன்பமே..
முத்துக்குளிகாமல் எடுத்த முத்து நீ
எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற சொத்து நீ
பட்டுப்போன வாழ்க்கை தனில்
மொட்டு பூக்க வைத்த காதலியே ...
Roses | Forward this Picture
No comments:
Post a Comment