Saturday, May 12, 2012

மகனின் மடல்....




பல காலம் தவமிருந்து
பத்து மாசம் காத்திருந்து
பக்குவமாய் பெற்ற மகன்
பாசத்துடன் வரைகின்றேன்..

காகிதத்தில் நான் வரையும்
காரணங்கள் ஒன்றிரண்டு
காலமெல்லாம் நீ பட்ட
கொடுந்துயரம் ஆயிரங்கள்..

உன்பெருமை எடுத்தியம்ப
என் திறமை போதாதம்மா
இருந்தாலும் ஒன்றிரண்டு
நான் சொல்வேன் கேட்டிடம்மா..

பட்டினியை உணவாக்கி
தாய்பாலை எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து
கண்மணிபோல் எனை காத்தாய்..
PhotobucketPhotobucket
Photobucket